வடகிழக்கு கஜகஸ்தானில், யூரேசியப் புல்வெளியின் வரலாற்றையே மாற்றியமைக்கும் வகையில் மண்ணுக்குள் புதைந்திருந்த 3,500 வருட மர்மம்: வரலாற்றையே புரட்டிப்போடும் பிரம்மாண்ட நகரம் கண்டுபிடிப்பு

மண்ணுக்குள் புதைந்திருந்த 3,500 வருட மர்மம்: வரலாற்றையே புரட்டிப்போடும் பிரம்மாண்ட நகரம் கண்டுபிடிப்பு!

வடகிழக்கு கஜகஸ்தானில், யூரேசியப் புல்வெளியின் வரலாற்றையே மாற்றியமைக்கும் வகையில், 3,500 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்டமான நகரம் ஒன்றின் எச்சங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வடகிழக்கு கஜகஸ்தானின் பரந்த, வெற்று புல்வெளிகளுக்கு அடியில், சுமார் 3,500 ஆண்டுகளாக ஒரு மாபெரும் ரகசியம் உறங்கிக் கொண்டிருந்தது. அது, வெண்கலக் காலத்தில் கோலோச்சிய ஒரு பிரம்மாண்டமான நகரம் (Metropolis). இப்போது, தொல்லியல் ஆய்வாளர்களின் கரங்களால் அந்த ரகசியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு, யூரேசியப் புல்வெளிப் பகுதியின் வரலாற்றையே மாற்றி எழுதும் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.



'செமியார்கா' (Semiyarka) - அதாவது 7 பள்ளத்தாக்குகளின் நகரம் என்றழைக்கப்படும் இது, சாதாரண இடமல்ல. இப்பகுதியில் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப் பெரிய, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட பண்டையக் குடியிருப்பு இதுதான். லண்டன் மற்றும் கஜகஸ்தான் பல்கலைக் கழகங்களை சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, சுமார் 140 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் இந்தத் தளத்தை அணு அணுவாக ஆய்வு செய்து வெளியிட்ட முடிவுகள் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு சாதாரணக் குடியிருப்பு மட்டுமல்ல, வெண்கல உற்பத்தி மற்றும் தொலைதூர வர்த்தகத்திற்கான ஒரு பரபரப்பான மையமாகத் திகழ்ந்திருக்கிறது.


இந்த நகரம் கி.மு.1,600 காலகட்டத்தைச் சேர்ந்தது. வரலாற்றில் இந்தக் காலகட்டம் என்றாலே, மக்கள் நிலையான இடமின்றி தற்காலிக முகாம்களில் வாழும் நாடோடிக் குழுக்களாகத்தான் இருந்தார்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், செமியார்காவின் கண்டுபிடிப்பு அந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியுள்ளது.


செமியார்கா 

ஒரு முழுமையான, நிலையான சமூகத்தைக் கண்முன் நிறுத்துகிறது. அங்கு வரிசையாகக் காணப்படும் மண் மேடுகள், பல அறைகளைக் கொண்ட வீடுகளாக இருந்திருக்கின்றன. நகரின் மையத்தில் ஒரு பிரம்மாண்டமான அமைப்பு இருந்துள்ளது. இது ஒருவேளை அவர்களின் வழிபாட்டுத் தலமாகவோ அல்லது சமூகத் தலைவர்கள் கூடும் இடமாகவோ இருந்திருக்கலாம். இவ்வளவு பெரிய, நீடித்த சமூகத்தைக் கட்டமைக்கும் அளவுக்கு அவர்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக இருந்துள்ளனர்.

இந்நகரத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், அங்கு அடையாளம் காணப்பட்ட பிரத்யேக 'தொழில்துறை மண்டலம்' (Industrial Zone) தான். தகரம் கலந்த வெண்கலத்தை (tin bronze) உற்பத்தி செய்வதற்கென்றே ஒரு தனிப் பகுதியை அவர்கள் ஒதுக்கியுள்ளனர். இப்பகுதியில் இவ்வளவு பெரிய அளவில் நடந்த உலோக உற்பத்திச் செயல்பாடு இதுவே முதல் முறை.

"இது கடந்த சில தசாப்தங்களில் நிகழ்ந்த மிக முக்கியமான தொல்லியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று" என்று சிலிர்ப்புடன் கூறுகிறார் தலைமைத் தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் மில்ஜானா ராடிவோஜெவி. "இடம் பெயரும் சமூகங்கள் கூட பெரிய அளவிலான தொழில்துறையை மையமாகக் கொண்ட நிலையான நகரங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இதுவே சாட்சி. இது ஒரு உண்மையான நகர மையம் (Urban Hub)," என்கிறார் அவர்.


அலெக்ஸீவ்கா-சர்காரி

இந்த இடத்தை அவர்கள் சும்மா தேர்ந்தெடுக்கவில்லை. இர்திஷ் நதியை (Irtysh River) நோக்கிய ஒரு மேடான பகுதியில், செம்பு மற்றும் தகரம் அதிகம் கிடைக்கும் அல்தாய் மலைகளுக்கு அருகே இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், செமியார்காவை ஒரு பிராந்திய சக்தியாகவும், முக்கிய வர்த்தகப் பரிமாற்ற மையமாகவும் மாற்றியிருக்கிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட உலைக்கலன்கள், உலோகக் கழிவுகள் மற்றும் நேர்த்தியாகச் செய்யப்பட்ட வெண்கலப் பொருட்கள், அங்கு நடந்த தொழில் நுட்பத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன. மட்பாண்டங்கள் மற்றும் பிற பொருட்கள், இங்கு 'அலெக்ஸீவ்கா-சர்காரி' (Alekseevka-Sargary) மக்கள் வாழ்ந்ததைக் காட்டினாலும், அவர்கள் 'செர்காஸ்குல்' போன்ற பிற நாடோடி குழுக்களுடனும் வலுவான வர்த்தக மற்றும் கலாச்சாரத் தொடர்பில் இருந்துள்ளனர் என்பதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.


தொடரும் ஆய்வுகள்

புல்வெளியில் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் எப்படிப்பட்ட நகர நாகரிகத்தையும், தொழில்துறை வாழ்வையும் வடிவமைத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த 'செமியார்கா' திறவுகோலாக மாறியிருக்கிறது. மண்ணுக்குள் இன்னும் என்னென்ன ரகசியங்கள் புதைந்திருக்கின்றனவோ சர்வதேசக் குழுவின் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.






















This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob

Comments

Popular posts from this blog

இன்று நாம் பரவலாகவும் நவீனமாகவும் பயன்படுத்தும் இணையத்தின் வளர்ச்சி 2000 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்று பார்ப்போம்

நம் பாரம்பரியத்தின் மறையாத நினைவு, கடந்த காலத்தின் சாட்சி, காலத்தால் மறக்க முடியாத கதை - சுமைதாங்கி கல்

Understanding Air Circuit Breakers: Functionality, Benefits, and Applications in Industrial and Commercial Electrical Power Distribution Systems