சனியின் நிலவான டைட்டனில் மீத்தேன் ஆறுகள்... வெளிப்புற சூரியக் குடும்பத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளைத் திணறடித்த புகைப்படம்!

 சனியின் நிலவான டைட்டனில் மீத்தேன் ஆறுகள்... வெளிப்புற சூரியக் குடும்பத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளைத் திணறடித்த புகைப்படம்!

ஜன.2005-ல், நாசாவின் காசினி விண்கலத்தால் சனியின் நிலவான டைட்டனுக்கு அனுப்பப்பட்ட ஐரோப்பிய 'ஹைஜீன்ஸ்' (Huygens) ஆய்வுக் கலம், வெளிப்புற சூரியக் குடும்பத்தில் தரையிறங்கிய முதல் விண்கலமாகச் சாதனை படைத்தது.


2005-ம் ஆண்டு, மனித குல வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்ந்தது. சனியின் மிகப்பெரிய நிலவான, அடர்ந்த ஆரஞ்சுப் புகைக்குள் மறைந்திருக்கும் டைட்டன் மீது, ஐரோப்பாவின் சிறிய ஆய்வுக் கலமான 'ஹைஜீன்ஸ்' (Huygens) தரையிறங்கியது. நமது சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் தரையிறங்கிய ஒரே விண்கலம் அதுதான்.


மர்மம் நீடிக்கிறது

ஆனால், அந்தச் சாதனைப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தரவுகள் மற்றும் படங்களில், ஒன்று மட்டும் இன்றும் விடை தெரியாத அறிவியல் புதிர்போல நீடிக்கிறது. தரையிலிருந்து வெறும் 8 கி.மீ. உயரத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஒற்றைப் புகைப்படம், டைட்டனின் பனிப்பரப்பில் ஆழமாகச் செதுக்கப்பட்ட, பூமியில் உள்ள ஆறுகள் போல் கிளைகளாகப் பிரியும் கால்வாய்களைக் காட்டியது. 2 தசாப்தங்கள் ஓடிவிட்டன, ஆனால் அந்தக் கால்வாய்களை உருவாக்கிய திரவம் எது, அது எப்படி உருவானது என்ற மர்மம் நீடிக்கிறது.


மீத்தேன்

டைட்டனின் மேற்பரப்பை பார்க்கும்போது, அதில் நீர் ஓடியதற்கான அரிப்புக்குறியீடுகள் (Erosion) பளிச்சென்று தெரிகின்றன. ஆனால், டைட்டன் மிகக் குளிர்ச்சியானது; அங்கு நீர் திரவமாக இருக்கவே முடியாது. அப்படியானால் அந்தக் கால்வாய்களைச் செதுக்கியது எது?விஞ்ஞானிகளின் இந்தக் குழப்பத்துக்கு காரணம், பூமியைப் போலவே மீத்தேன் திரவம் (Liquid Methane) டைட்டனில் செயல்படுவதுதான். ஆம், மீத்தேன் மழையாகப் பொழிந்து, ஆறுகளாக ஓடி, இறுதியில் ஏரிகளில் சேகரமாகிறது என்பதே நிலவும் பிரதானக் கோட்பாடு. ஹைஜீன்ஸ் தரையிறங்கிய இடம் ஒரு வறண்ட ஆற்றுப்படுகை போலக் காட்சியளித்தது.

டைட்டனின் சராசரி வெப்பநிலை –179°C. அதீதக் குளிரில் மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகியவை திரவமாக மாறி, டைட்டனின் நிலப்பரப்பைச் செதுக்கியுள்ளன. இந்தக் கால்வாய்கள் அங்கே எப்படி உருவாயின? பருவமழையால் ஏற்பட்டதா? அல்லது பழங்கால வெள்ளப்பெருக்கா? அல்லது நிலவுக்குள் இருந்து வந்த எரிமலைச் செயல்பாடா? இந்த கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லை.

டைட்டனின் மேற்பரப்பு மட்டும் ஆச்சரியம் அளிக்கவில்லை; அதன் வளிமண்டலமும் நம் இளம் பூமியைப் போலவே இருக்கிறது. டைட்டனின் காற்று 98.4% நைட்ரஜன், 1.4% மீத்தேன் கொண்டுள்ளது. இது ஆதி பூமிக்குச் சமமான ஒரு ரசாயன அமைப்பாகும். சூரிய ஒளியால் மீத்தேன் வினைபுரிந்து உருவாகும் சிக்கலான கரிமச் சேர்மங்கள் டைட்டனின் புகையில் நிறைந்துள்ளன. இவை உயிரின் அடிப்படை மூலக்கூறுகளை உருவாக்கக் கூடியவை என நம்பப்படுகிறது.


ஹைஜீன்ஸ் விண்கலம்

உயிரின் அடிப்படைச் சங்கிலி (Organic Synthesis) எப்படி உருவாகியது என்பதைப் புரிந்துகொள்ள, டைட்டன் ஒரு பிரம்மாண்டமான ஆய்வுக் கூடமாகச் செயல்படுகிறது. நம் பூமியில் மீண்டும் உருவாக்க முடியாத, கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகளின் உறைந்த பொக்கிஷம் டைட்டன். ஹைஜீன்ஸ் விண்கலம் மேற்பரப்பில் செலவிட்டது வெறும் 72 நிமிடங்கள் மட்டுமே! ஆனால், அந்த ஒரு மணி நேரத்தில் கிடைத்த தரவுகள்தான் கிரக அறிவியலை முற்றிலுமாக மாற்றியமைத்தன.

அந்த விண்கலம் ஒரு மென்மையான தரைத் தாக்கத்தைச் சந்தித்தது. தரையானது ஈரமான மணல் போன்ற அமைப்பில், பனிக்கட்டி கூழாங்கற்களால் ஆனதாக இருந்தது. 8 கி.மீ. உயரத்தில் எடுக்கப்பட்ட அந்தக் கால்வாய்ப் படம், இந்தக் கால்வாய்கள் சமீபத்திய நிகழ்வுகளா அல்லது டைட்டனின் நீண்ட காலப் புவியியல் மாற்றத்தின் எச்சங்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்தக் குழப்பமான டைட்டன் உலகை ஆராய, நாசா ஒரு புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அதுதான் டிராகன்ஃபிளை (Dragonfly). பறக்கும் ஆய்வகம், தரையில் நிலையாக நிற்காமல், ஹெலிகாப்டர் போலச் செயல்படும் ரோட்டர்கிராப்ட் லேண்டராகும். இது டைட்டனின் மேற்பரப்பில் பல இடங்களுக்கு தாவிச்சென்று ஆய்வு செய்ய முடியும். 2028-ல் ஏவப்பட்டு, 2030-களின் நடுப்பகுதியில் டைட்டனை அடையும். உயிரின் அடிப்படை மூலக்கூறுகள் மற்றும் ரசாயன மாற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதே இதன் இலக்கு.

ஹைஜீன்ஸின் 90 நிமிடப் புகைப்படம் எழுப்பிய மர்மங்களுக்கு, டிராகன்ஃபிளை பல ஆண்டுகள் செயல்பட்டு, டைட்டனின் புவியியல் மற்றும் வேதியியல் ரகசியங்களை முழுமையாக வெளிப்படுத்தும் என விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.



























This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work
Work Involves:
Content publishing
Content sharing on social media
Time Required: As little as 1 hour a day
Earnings: ₹300 or more daily
Requirements:
Active Facebook and Instagram account
Basic knowledge of using mobile and social media
For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob

Comments

Popular posts from this blog

இன்று நாம் பரவலாகவும் நவீனமாகவும் பயன்படுத்தும் இணையத்தின் வளர்ச்சி 2000 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்று பார்ப்போம்

நம் பாரம்பரியத்தின் மறையாத நினைவு, கடந்த காலத்தின் சாட்சி, காலத்தால் மறக்க முடியாத கதை - சுமைதாங்கி கல்

Understanding Air Circuit Breakers: Functionality, Benefits, and Applications in Industrial and Commercial Electrical Power Distribution Systems