மதுரையின் அரசி மீனாட்சி அம்மன் வரலாறு, சித்திரை திருவிழா வரலாறு மற்றும் பெருமையை பற்றி ஒரு கட்டுரை

சித்திரை திருவிழாவின் வரலாறு

 மதுரை சித்திரை திருவிழா, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர் கோவிலில் நடைபெறும் ஒரு பெரிய திருவிழாவாகும். இது சைவ, வைணவ சமயங்கள் இணைந்து கொண்டாடும் ஒரு சிறப்புத் திருவிழா. இது ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 


மீனாட்சி அம்மன் வரலாறு 


மீனாட்சி அம்மன் மலையத்துவஜன் பாண்டிய மன்னனுக்கும், காஞ்சனாமாலை அரசிக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாமல் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


சிவபெருமானின் அருளால் மீனாட்சி யாகசாலை அக்னியில் தோன்றி அவதரிக்கிறார். இதனால் தடாமை அங்கயர் கன்னி என்ற பெயரும் மீனாட்சி அம்மனுக்கு உண்டு.


மீனாட்சிக்கு பிறப்பிலேயே மூன்று மார்பகங்களை கொண்டிருக்கிறார், தன்னை மணம் முடிப்பவரை காணும் போது அந்த நடு மார்பகம் மறைந்து விடும் என்றும், கயிலை மலையில் சிவபெருமானை பார்த்தவுடன் அந்த மார்பகம் மறைந்து விடுகிறது .இதனை உணர்ந்த மீனாட்சி அவர் மீது காதல் கொள்கிறார். சிவபெருமானும் சுந்தரேஸ்வரராக மீனாட்சி கரம் பிடிக்கிறார்.


மீனாட்சி அம்மன் கருவறை தேவேந்திரனால் அமைக்கப்பட்டது என தல வரலாறு கூறுகிறது. மேலும் மீனாட்சி அம்மனின் திருமேனி சிலை மரகதக் கல்லால் ஆனதாகும்.


இக்கோவில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இக்கோவிலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு தான் சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது .


மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

சித்திரை திருவிழாவின் முதல் பாகமாக, மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரருடன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்தத் திருக்கல்யாணம் மாசி மாதத்தில் நடைபெற்று வந்த நிலையில், திருமலை நாயக்கர் காலத்தில் சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது. 


அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா

மீனாட்சி அம்மன் திருமணத்திற்கு அழகர் ஆற்றில் இறங்கி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், திருமணம் முடிந்து அவர் ஆற்றில் திரும்பி விடுவதாகவும், இது ஒரு புதிய கதையாக புனையப்பட்டது. 

கள்ளழகர்

அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில், கள்ளழகர் கள்ளர் வேடத்துடன் வைகை ஆற்றில் இறங்குவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் கள்ளர் இனத்துக்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் போற்றப்படுகிறார். 

பூச்சொரிதல்

சித்திரை திருவிழாவில், தெய்வங்களின் மீது வண்ணமயமான சிறகு பொம்மைகள் மூலம் மலர்கள் பொழியும் சடங்கு நடக்கிறது. 

சித்திரை திருவிழாவின் முக்கியத்துவம்

சைவ, வைணவ ஒற்றுமை

சித்திரை திருவிழா, சைவ மற்றும் வைணவ சமயங்கள் இணைந்து கொண்டாடும் ஒரு சிறப்புத் திருவிழாவாகும்.

மக்களின் கொண்டாட்டம்

திருவிழா, மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. இது திருவிழாக்களின் திருவிழாவாக மக்களின் கொண்டாட்டத்திற்கு மையப்புள்ளியாகவும் உள்ளது.

மதுரையின் பெருமை

மதுரை சித்திரை திருவிழா, மதுரையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு திருவிழாவாகும். 


சித்திரை திருவிழா நடைபெறும் இடங்கள்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்.

அழகர் கோவில்.

சோழவந்தான், மானாமதுரை, பரமக்குடி, அழகன்குளம் ஆகிய இடங்களிலும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது.






This Content Sponsored by Buymote Shopping app


BuyMote E-Shopping Application is One of the Online Shopping App


Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)


Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8


Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

Comments

Popular posts from this blog

Different Types of Gold Purity Certifications and Hallmarking Standards Every Buyer Should Know Before Purchasing Gold Jewellery in India

இன்றைய சமூகத்தில் வரதட்சணைக்காக பெண்களுக்கு நடத்தப்படும் துன்புறுத்தல்கள் அதன் அடிப்படையிலான பெண்கள் கொடுமைகள் மற்றும் அதனால் நேரும் மரணங்கள் தொடர்பான சமீபத்திய சமூக நிகழ்வுகள்

The Evolution of House Construction Methods from Ancient Mud Huts to Modern Smart and Sustainable Homes