புயல் வெள்ளம் மற்றும் வறட்சியால் ஒரு சாதாரண மனிதன் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து என்னுடைய பார்வையில் ஒரு கட்டுரை
இயற்கை வறட்சி மழைக்காலம் வந்தது; ஆனால் மழை வரவில்லை, மழைக்காலத்திலேயே மழை வரவில்லையே என எல்லோரும் கவலைப்பட ஆரம்பித்தனர். விதைத்த விதை என்னவாவது? வயல்களில் நட்ட பயிர்கள் எப்படி விளையும்? ஏற்கனவே நீரின்றி பயிர்கள் வாடத் தொடங்கிவிட்டதே ! ஏரியிலும் நீரில்லை; கிணற்றிலும் நீரில்லை; வாய்க்காலும் வறண்டு விட்டது என பெருமூச்சு விட்டனர் மக்கள். இன்னும் ஒரு மாதத்திற்குள் மழை பொழியா விட்டால் குடிக்கக்கூடத் தண்ணீரின்றி எல்லோரும் அவதிப்படுவர் என்று நினைக்கும் போதே பயம் வந்து விட்டது. இன்று மழை பெய்யும், நாளை மழை பெய்யும் என்று நாட்கள் நகர்ந்தனவே தவிர மழை ஒன்றும் வரவில்லை. மரங்கள் காய்ந்து விறகுகளாய் மாறின. வயல்வெளிகளில் பயிர்கள் எல்லாம் சருகாய்க் காய்ந்து நைந்து போயின. வெயிலின் தாக்கத்தால் எரிந்து விடுமோ என்ற நிலை. எங்கும் வறட்சி; மனிதர்களுக்கே குடிக்க நீரில்லாத போது ஆடுமாடுகளுக்கு யார் நீர் தருவது? கொடுமை! வெயிலின் கொடுமை! தாங்க முடியாமல் தவித்த நான் விடியலைத் தேடி ஏங்கிக் கொண்டிருந்தேன். வெள்ளம் இந்த டிசம்பர் மாதம் எங்கள் ஊரில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. புயலும் சேர்ந்து கொண்டு பெருங்காற்றாய்...